Thursday, August 23, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 5

கக்குவான் இருமல் குணமாக:

நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:

கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர:

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

தலைவலி குணமாக:

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.
இரத்த கொதிப்பு குணமாக:

அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

கண்வலி வராமல் தடுக்க:

எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

தொண்டை கரகரப்பு நீங்க:

துளசி இலை, கருப்புர வள்ளி ,ஓமவள்ளி இலை,அதிமதுரம்,திப்பிலி மூன்றையும் கஷாயம் செய்து குடிக்கலாம்.

பூவரசன் வேர் பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

குடல்புண் குணமாக:

மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

தேங்காய் பால்களில் சிறிது கடுக்காய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

கால்பித்த வெடிப்பு:

அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

இரத்தம் சுத்தமாக:

தினசரி இலந்தை நாவப்பழம் உணவில் பீட்ரூட் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...


நன்றி....

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 4

 வயிற்று கடுப்பு நீங்க:

அரச இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து குடிப்பதன் மூலம் வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

மந்தம் அஜீரணம் குணமாக:

கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து மிளகு, சுக்கு, சீரகம், உப்பு பொடியாக்கி கலந்து வைத்துக் கொள்ளவும். சோற்றுடன் 1 கரண்டி பவுடர் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் மந்தம் நீங்கும், மலக்கட்டு நீங்கும்.

சிறு நீர் எரிச்சல் குணமாக:

அன்னாசி பழச்சாறு சாப்பிட சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

வாய் நாற்றம் போக:

நெல்லி முள்ளி. தான்றிக்காய், கடுக்காய் மூன்றையும் குடி நீரில் ஊறவைத்து காலையில் இந்த தண்ணீரில் வாய் கொப்பளிக்கவும். இதனால் வாய் நாற்றம் தீரும்.

சர்க்கரை வியாதி நீங்க:

கோவை பழம் தினசரி 1 சாப்பிட்டு வர சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.

தோல் வளம் பெற:

ஆலமரத்து பட்டைகளை, அல்லது பதிமுக பட்டை, பட்டுபோல் அரைத்து வெந்நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சர்க்கரை கலந்து வாரம் 1 முறை பருகி வந்தால் சரும நோய் வராது. தோலும் வளம்பெறும்.

வறட்டு இருமல் தனிய:

எலுமிச்சம் பழச்சாறு தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.

கருப்பை கோளாறு நீங்க:

அரசஇலை கொழுந்து 10 – 20 எடுத்து அரைத்து மோருடன் பருகி வர கருப்பையில் தங்கிய அழுக்குகள், அடைப்புகள், கட்டிகள், கிருமிகள், சதை வளர்ச்சி ஆகியவை நீங்கும்.


இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...




இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 3

இரத்த பேதியை குணப்படுத்த:

அத்திப்பட்டை, நாவல்பட்டை, கருவேலம் பட்டை, நறுவிளம் பட்டை ஆகியவற்றை சமஅளவு பொடிசெய்து 50 கிராம் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி நாள்தோறும் 3 வேளை குடித்து வர இரத்த பேதி, சீத பேதி குணமாகும்.

மூட்டுவலி குணமாக:

அத்திப்பாலை பற்று போட்டு வர மூட்டு வலி குணமாகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:

தினசரி 3 பேரிச்சம்பழம் கடுக்காய் பொடி, மாம்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பற்கள் உறுதியாக இருக்க:

மாவிலையை பொடி செய்து பல் துளக்கினால் பற்கள் சுத்தமாகவும் உறுதியாகவும் இருக்கும்.

சேற்றுபுண் குணமாக:

காய்ச்சிய வேப்பெண்ணெய் தடவி வர சேற்று புண் குணமாகும்.

மூலம் இரத்தம் வெளியேறுவதை நிறுத்த:

வெங்காய சாறு 50 மில்லி, பசும்பால் 400 மில்லி, அதி மதுரம் 20 கிராம் சேர்த்து காய்ச்சி பதமாகும் வரை கொதிக்க காய்ச்சி பத்திரப்படுத்தவும். இதனை நாள்தோறும் 1 கரண்டி வீதம் ஆறு நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

வயிற்றுவலி குணமாக:

மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று புண் குணமாகும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று பூச்சிகள் ஒழிய:

வேப்பிலையை நன்றாக அரைத்து சாறு எடுத்து அத்துடன் 1 கரண்டி தேன் சேர்த்து கலக்கி காலை, மாலை இரண்டு வேளை சாப்பிட வயிற்று பூச்சிகள் தொந்தரவு இராது.

மலச்சிக்கல் தீர:


பேயன் வாழைப்பழம் தோலுடன்  வில்லையாக நறுக்கி பனங்கல்கண்டு சேர்த்து ஆமணக்கு எண்ணெய்யில் ஊற வைக்கவும் போத்தலை அன்றாடம் வெயிலில் வைக்கவும். 3 நாட்கள் ஊறிய பின் தினசரி 1 வில்லை எண்ணெய்யுடன் உட்கொள்ளவும். மலச்சிக்கல் தீரும்

குழந்தைகளுக்கு கண் சூடுதணிய:


நெல்லிக்காய் சாறு பிழிந்து எடுத்து உள்ளுக்குள் கொடுத்து வர கண்சூடு குணமாகும்.


இரத்தத்தை சுத்தப்படுத்த:


ஒரு கேரட்  ஒரு ஆப்பிள் மற்றும் இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும்.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...



 நன்றி...


Monday, August 20, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 2

நெஞ்சுவலி குணமாக
அத்திப்பழம்:

நெஞ்சுவலி குணமாக அத்திப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வர நெஞ்சுவலி வராது. அத்திப்பழம் இருதயத்தை பலப்படுத்தும்.

விஷக்கடிக்கு மருத்துவம்
தும்பை இலை சாறு:



சிலந்தி கடிக்கு தும்பை இலை சாறு மிகவும் ஏற்றது. எல்லா விஷகடிகளுக்கும் சிறந்த மருந்து தும்பை இலை சாறு.

சீதபேதி குணமாக:
புளியங்கொட்டை தோல் :

மாதுளை பழத்தோல் :


 புளியங்கொட்டை தோல், மாதுளம் பழத்தோல் சம அளவு இடித்து தூள் செய்து பசும்பாலில் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.

வயிற்று நோய் குணமாக:
சீரகம்:

சீரகத்தை வறுத்து பொடி செய்து மோரில் சாப்பிடி வயிற்று நோய் குணமாகும்.

காது வலி குணமாக: 
வெற்றிலை:

வெற்றிலை சாறை காதில் விட்டால் காதுவலி குணமாகும்.

நுரையீரல் குணமாக:

நாயுருவி விதை:
நாயுறுவி செடியின் விதைகளை காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து போத்தலில் வைத்து தினசரி காலை, மாலை இரு வேளை 10 மில்லி பாலில் சாப்பிட்டு வர நுரையீரல் நோய் குணமாகும்.

பேதி குணமாக:

மாங்கொட்டை பருப்பு:

மாங்கொட்டை பருப்பை பொடி செய்து பசும்பாலில் கலந்து கொடுத்தால் தண்ணீராக போகும் பேதி நிற்கும்.

வாதநோய் குணமாக:

குப்பை மேனி: 

குப்பைமேனி இலை சாறு எடுத்து தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வர வாதநோய் குணமாகும்.

மலச்சிக்கல் குணமாக:

அகத்திக்கீரை:


அகத்தி கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து காலை, மாலை 1 கரண்டி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

மேகரோகம் குணமாக:

ஆலம்பட்டை:

கருப்பட்டி:


ஆலம்பட்டையை பட்டு போல் பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மேகரோகம் குணமாகும்.

நீரழிவு நோய் குணமாக:

மாந்தளிர்:


மாமரத்தின் தளிர் இலையை உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 1 கரண்டி வெந்நீரில் கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நீரழிவு நோய் குணமாகும்.


இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்....

நன்றி......

Sunday, August 19, 2018

பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவ தீர்வுகள் Part 3



பெரும்பாடு பிரச்சினைக்கு:

 மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்குடன் வயிற்றுவலி சேர்ந்து வருவது பெரும்பாடு எனப்படும்.

இந்த நோயால் அவதிப்படுகிறவர்களுக்கான இயற்கை முறையில் மருத்துவ தீர்வுகள்:

நாவல் மரப்பட்டை:


நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதில் தண்ணி விட்டு நன்றாக இடித்து, 100 மில்லி வரும் அளவிற்கு தண்ணி சேர்த்து காலையில்  வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பெரும்பாடு தீரும்.

வாழைப்பூ:

ஒரு முழு வாழைப்பூவை எடுத்து கொள்ள வேண்டும்.  அதனை நன்றாக இடித்து சாற்றை பிழிந்து எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மோர் சேர்த்து கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்தில் வருகின்ற வயிற்று வலியும், ரத்தப்போக்கும் சரியாகும்.

கடுக்காய்:

கடுக்காயின் தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனை 25 மில்லியாக சுண்ட வைத்து மூன்று  நாட்கள் குடித்து வர பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

அருகம்புல்:

மாதுளை இலை:


அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்துகொள்ள வேண்டும், அதனை 100 மில்லி தண்ணீரில் போடடு கொதிக்க வைத்து, 50 மில்லியாக சுண்ட வைத்து காலையில் பாதி, மாலையில் பாதி குடிக்க வேண்டும். இதேபோல 5 நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்துல வருகின்ற வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு சரியாகும்.

தும்பை பூ:

தும்பை இலையினை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அதனை நன்கு அரைத்து, பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது போல் மூன்று நாள் சாப்பிட்டால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

மாதுளை இலை:

இலந்தை மர இலை:


இலந்தை இலை, மாதுளை இலை இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு  எடுத்து  அரைத்து கொள்ள வேண்டும். அதனை 200 தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாள் குடித்தால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.

நெல்லிவற்றல்:

படிகாரம்:


கற்கண்டு:


நெல்லி வற்றல் 50கிராம், படிகாரம் 50கிராம், கல்கண்டு 50 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். அதனை பொடி பண்ணி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டால் பெரும்பாடு சரியாகும்.


மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...

தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...

நன்றி...




சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...