Thursday, August 23, 2018

இயற்கை மருத்துவ குறிப்புகள் Part 5

கக்குவான் இருமல் குணமாக:

நாயுறுவி கதிர், 1 சீயக்காய், 1 மஞ்சள் துண்டு சேர்த்து அரைத்து 1 டம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும். காலை, மாலை 1/2 டம்ளர் கொடுக்க குணமாகும்.

இரத்தம் உறைதல் குணமாக:

நெல்லிக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் உறைவதை தடுக்கலாம்.

சொறி சிரங்கு குணமாக:

கீழாநெல்லி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து பூசி 1 மணி நேரம் கழித்து குளிக்க சொறி சிரங்கு குணமாகும்.

சளி மூக்கடைப்பு தீர:

கடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.

தலைவலி குணமாக:

குப்பைமேனி சாறு தடவ தலைவலி குணமாகும்.
இரத்த கொதிப்பு குணமாக:

அகத்தி கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டு வர இரத்த கொதிப்பு ஏற்படாது.

கண்வலி வராமல் தடுக்க:

எள் செடியின் பூவை பறித்து பற்களில் படாமல் விழுங்கி விட வேண்டும். எத்தனை பூக்கள் விழுங்குகின்றமோ அத்தனை வருடம் கண்வலி வராது.

தொண்டை கரகரப்பு நீங்க:

துளசி இலை, கருப்புர வள்ளி ,ஓமவள்ளி இலை,அதிமதுரம்,திப்பிலி மூன்றையும் கஷாயம் செய்து குடிக்கலாம்.

பூவரசன் வேர் பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டை தொடர்பான பிணி அகலும்.

குடல்புண் குணமாக:

மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

தேங்காய் பால்களில் சிறிது கடுக்காய் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரவும்.

கால்பித்த வெடிப்பு:

அரசமரத்து பாலை பித்தவெடிப்பு மீது தடவிவர குணமாகும்.

இரத்தம் சுத்தமாக:

தினசரி இலந்தை நாவப்பழம் உணவில் பீட்ரூட் சாப்பிடுங்கள். இலந்தை பழம் இரத்தத்தை சுத்திகரித்து சக்தி அதிகரிக்கும். சுறுசுறுப்பு உண்டாகும். பசியை தூண்டும்.



இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...


நன்றி....

No comments:

Post a Comment

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...