மணம் வீசும் மலர்களின்
மருத்துவ குணங்கள்
இலுப்பைப்பூ
இழுப்பைப் பூவை பாலில் போட்டு
மருத்துவ குணங்கள்
இலுப்பைப்பூ
இழுப்பைப் பூவை பாலில் போட்டு
காய்ச்சி தினம் ஒரு வேளை
பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும்.
மேலும் தாக்கத்தை விரட்டியடிக்கும்.
அகத்திப் பூ
அகத்திப் பூவை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கி
பாலில் காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு , பித்த சூடு நீங்கும்.
நெல்லிப்பூ
நெல்லிப்பூ உடலுக்கு குளிர்ச்சியை தரும்.
இதனுடன் விழுதி இலை , வாத நாராயணா இலை சேர்த்து
சாப்பிட சுகபேதி உண்டாகும்.
மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்தது.
மகிழம் பூ
மகிழம் பூவின் மணம் கண்நோய், தலைவலி, தலைபாரம்
போன்ற நோய்களை நீக்கிவிடும்.
முருங்கைப்பூ
ஆண்களுக்கு ஆண்மையை அதிகரித்து தாது பெருக்கம் செய்யும்.
வயிற்றில் உள்ள கிருமிகளை ஒழிக்கும்.
குங்குமப்பூ
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒரு வேளைக்கு 5 முதல் 10 இதழ்களை பாலில் போட்டு காய்ச்சி குடித்து வர சீதள சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
தலை குளித்த பிறகு வெற்றிலையில் 5 முதல் 10 இதழ்களை வைத்து சாப்பிட்டால் சளி பிடிக்காது.
பிறக்கும் குழந்தை நல்ல திடகாத்திரமாக இருக்கும்.
ஆவாரம் பூ
ஆவாரம்பூவை உலர்த்தி வேளை ஒன்றிக்கு 15 கிராம்
நீரில் போட்டு கஷாயமாக்கி பால் , சர்க்கரை கலந்து காப்பியாக பருகி வந்தால்
உடல் சூடு, நீரழிவு, நீர்க்கடுப்பு போன்ற நோய்கள் தீரும்.
ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் சேர்த்து உடலில் தேய்த்து குளித்தால் வேர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றம் நீங்கும்.
தோல் வியாதிகள் குணமாகும்.
இரத்த விருத்திக்கு மிக சிறந்தது.
தாழம்பூ
தாழம்பூவை தலையில் சூடிக்கொண்டால் பேன் மற்றும் எந்த கிருமியும் நெருங்காது.
தாழம்பூவின் சாறு உடல் வெப்பத்தை குறைத்து அம்மை நோயை தடுக்கும்.
இதயத்திற்கு வலிமையூட்டி உடல் வனப்பை அதிகரிக்கும்.
செம்பருத்தி பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் நெஞ்சு வலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூவை தண்ணீரில் போட்டு காய்ச்சி கலை மாலை இருவேளையும் குடித்து வந்தால் இருதயம் பலமாகும்.
இதில் தங்க சத்து நிறைந்தது.
மல்லிகைப்பூ
கண்பார்வையை கூர்மையாக்கும்.
காம உணர்ச்சியை தூண்டும்.
ஒரு நல்ல கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
கருச்செம்பைப்பூ
இந்தப்பூவையும், நல்லெண்ணையும் சேர்த்து காய்ச்சி தொடர்ந்து குளித்து வந்தால் தலையில் ஏற்பட்ட சீதனத்தை கண்டிக்கும்.
தலைவலி, தலைபாரம், கழுத்து நரம்பு வலி போன்றவற்றையும் நீக்கும்.
ரோஜாப்பூ
ரோஜாப்பூவின் மணம் இருதயத்திற்கு வலிமை தடுக்கிறது.
பாலில் ரோஜா இதழ்களை தூவி குடித்து வந்தால் நெஞ்சிசளி நீங்கும்.
இரத்த விருத்திக்கும் ஏற்றது.
வேப்பம்பூ
வேப்பம்பூ மிகச்சிறந்த கிருமி நாசினி.
உடல் குளிர்ச்சி பெற சிறந்தது.
வேப்பம்பூ வீட்டில் இருந்தால் சின்ன சிறு கிருமிகள் கூட உள்ளே வராது.
வாசனை மிக்க மலர்களின் மருத்துவ குணங்களை பற்றி பார்த்தோம்.
நன்றி...






















