Thursday, September 20, 2018

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்...

நான்கு வெற்றிலை,
முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்து இரண்டு டம்ளர் தண்ணீர்.....ஊற்றி கொதிக்கவிடவும்..கொதித்து ஒரு டம்ளர் ஆனவுடன் நிறுத்தி ஆரவைத்து வெறும் வயிற்றில் அதிகாலையில் குடித்துவர சுகர் குறைவது கண் கூடாக தெரியும்.

சர்க்கரை நோய் ஒரு வேளை மருந்தில் குணமாகும் நோயல்ல என்பதை எதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்
இந்த நோய் நமது உடலும் மணமும் உணவும் நமது வாழும் வாழ்க்கை நேரிமுறையும் சம்பந்தப்பட்டது.

மருத்துவ சிந்தனை...

மணத்தக்காளி கீரை...

உடல் எடை குறைய மணத்தக்காளிக் கீரையை (100 கிராம்), கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடம் போட்டு எடுத்து அதில் எலுமிச்சம் பழத்தைப் (பாதி அளவு தோலுடன்) நறுக்கி போட்டு அதனுடன்  சின்ன வெங்காயம் (2) அரிந்து போட்டு, எல்லாவற்றையும் அரைத்துச் சாறு எடுத்து, காலை உணவுக்குப் பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்..

இளைத்த உடல் பெருக்க மணத்தக்காளிக் கீரையில் இருந்து சாறு எடுத்து தேனில் கலந்து சர்பத்போல் காய்ச்சி தினமும் குடித்துவந்தால்  இளைத்த உடல் பெருக்கும்.

தொண்டைப் புண், குடல் புண் குணமாக மணத்தக்காளிக் கீரையுடன், தேங்காய் (ஒரு துண்டு), பாசிப்பருப்பு (100 கிராம்) இரண்டையும் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் தொண்டைப் புண், குடல் புண் குணமாகும்.

சிறுநீர் எரிச்சல், நீர்ச் சுருக்கு நீங்க மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி),பார்லி (ஒரு ஸ்பூன்), மஞ்சள் (4 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்ததுவந்தால்  நீர்ச் சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும் .

 சளி, இருமல் குணமாக மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி),மிளகு (10), திப்பிலி(3) மஞ்சள் (4 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்து தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல் குணமாகும்.

வாய்ப் புண், நாக்குப் புண் குணமாக மணத்தக்காளிக் கீரையுடன் (ஒரு கைப்பிடி),மஞ்சள் (4 சிட்டிகை) சேர்த்துக் கொதிக்கவைத்துச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், நாக்குப் புண்  போன்றவை தீரும்.

இந்த தகவல்கள் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்..


No comments:

Post a Comment

சர்க்கரை வியாதியை குறைக்கும் கஷாயம்

சர்க்கரை வியாதியை குறைக்கும்  கஷாயம்... நான்கு வெற்றிலை, முருங்கைக்கீரை சிறிதளவு, வேப்பங்கொழுந்து இரண்டு கொத்து போன்றவற்றை சுத்தம் செய்த...