பெரும்பாடு பிரச்சினைக்கு:
மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்குடன் வயிற்றுவலி சேர்ந்து வருவது பெரும்பாடு எனப்படும்.
இந்த நோயால் அவதிப்படுகிறவர்களுக்கான இயற்கை முறையில் மருத்துவ தீர்வுகள்:
நாவல் மரப்பட்டை:
நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதில் தண்ணி விட்டு நன்றாக இடித்து, 100 மில்லி வரும் அளவிற்கு தண்ணி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பெரும்பாடு தீரும்.
வாழைப்பூ:
மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்குடன் வயிற்றுவலி சேர்ந்து வருவது பெரும்பாடு எனப்படும்.
இந்த நோயால் அவதிப்படுகிறவர்களுக்கான இயற்கை முறையில் மருத்துவ தீர்வுகள்:
நாவல் மரப்பட்டை:
நாவல் மரப்பட்டை 50 கிராம் எடுத்து, அதில் தண்ணி விட்டு நன்றாக இடித்து, 100 மில்லி வரும் அளவிற்கு தண்ணி சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் பெரும்பாடு தீரும்.
வாழைப்பூ:
ஒரு முழு வாழைப்பூவை எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக இடித்து சாற்றை பிழிந்து எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் மோர் சேர்த்து கலக்கி, காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்தில் வருகின்ற வயிற்று வலியும், ரத்தப்போக்கும் சரியாகும்.
கடுக்காய்:
கடுக்காய்:
கடுக்காயின் தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து கொள்ள வேண்டும். அதனை நன்றாக தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். அதனை 25 மில்லியாக சுண்ட வைத்து மூன்று நாட்கள் குடித்து வர பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
அருகம்புல்:
அருகம்புல்:
மாதுளை இலை:
அருகம்புல் 10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்துகொள்ள வேண்டும், அதனை 100 மில்லி தண்ணீரில் போடடு கொதிக்க வைத்து, 50 மில்லியாக சுண்ட வைத்து காலையில் பாதி, மாலையில் பாதி குடிக்க வேண்டும். இதேபோல 5 நாள் குடித்து வர மாதவிடாய் நேரத்துல வருகின்ற வயிற்றுவலி, அதிக ரத்தப்போக்கு சரியாகும்.
தும்பை பூ:
தும்பை பூ:
தும்பை இலையினை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அதனை நன்கு அரைத்து, பாலுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது போல் மூன்று நாள் சாப்பிட்டால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
மாதுளை இலை:
இலந்தை மர இலை:
இலந்தை இலை, மாதுளை இலை இரண்டையும் ஒவ்வொரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து கொள்ள வேண்டும். அதனை 200 தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாள் குடித்தால் பெரும்பாடு பிரச்சினை சரியாகும்.
நெல்லிவற்றல்:
நெல்லிவற்றல்:
படிகாரம்:
கற்கண்டு:
நெல்லி வற்றல் 50கிராம், படிகாரம் 50கிராம், கல்கண்டு 50 கிராம் எடுத்து கொள்ள வேண்டும். அதனை பொடி பண்ணி வைத்துக் கொண்டு அதில் கால் ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டால் பெரும்பாடு சரியாகும்.
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...











No comments:
Post a Comment